கோழிக்கோட்டில் 30 லட்சம் தங்க பிஸ்கட் பறிமுதல்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள்நடத்திய சோதனிைல் ஷார்ஜாவிலிருந்து வந்த பயணியிடம் ரூ. 30.5 லட்சம்மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் சிக்கியது.
கோழிக்கோடு, கரிப்பூர் விமான நிலையத்தில் வருமான வரித் துறையின் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் வழக்கம் போல பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
ஷார்ஜாவிலிருந்து வந்த அப்துல் ரஹ்மான் என்பவரிடமும் இதுபோல விசாரணைநடந்தது. அப்போது 7.5 கிலோ எடை கொண்ட 60 தங்க பிஸ்கட்டுகளை, அப்துல்ரஹ்மானிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஷார்ஜாவைச் சேர்ந்த முகம்மதுபஷீர் என்பவர் இந்த பிஸ்கட்டுகளைக் கொடுத்ததாக விசாரணையில் ரஹ்மான்தெரிவித்தார்.
மலப்புரம் மாவட்டம் வல்லும்பரம்-மாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஹவாலாஏஜென்டிடம் இந்தப பணத்தைக் கொடுக்க இருந்ததாகவும் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.