தமிழக அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் விடுவிக்கக் கோரிய 5 தமிழ்த் தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கூடாதுஎன்று கோரி சுப்ரீம் கோர்ட்டில், பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் விடுவிக்கக் கோரிய தடா கைதிகள் 51 பேரை விடுதலைசெய்ய உச்ச நீதிமன்றம் காலவரையற்ற தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகமுதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

கேள்வி: கர்நாடக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க, உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஐந்து தீவிரவாதிகளின் நிலை என்ன?

பதில்: டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதர்ஷ் கணேசன் என்பவர் 22.8.2000அன்றும், 24.8.2000 அன்று டெல்லியைச் சேர்ந்த மற்றொரு வழக்கறிஞர் வதேராஎன்பவரும் தமிழகத்தில் உள்ள ஐந்து தீவிரவாதிகளையும் விடுதலை செய்யக் கூடாதுஎன்று பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார்கள்.

இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.ஏற்கனவே கர்நாடகத்தில் உள்ள கைதிகள் விஷயத்தில் உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்துள்ளது. அந்த நிலையை அறிந்து தமிழக அரசு மேல்நடவடிக்கை எடுக்கும்.

கர்நாடக அரசுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தமிழ்நாட்டில் உள்ள 5தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதால் உச்ச நீதிமன்றத்தில் இந்த 5 பேருடையவிடுதலைக்காக சட்டபூர்வமான மேல் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும்.

இந்த விவரத்தை நக்கீரன் கோபால் வீரப்பனுக்கு விளக்குவார் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+