சயனைட் ஸ்வீட் வழக்கு ... விசாரணைக் குழு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை போலீஸ் நிலையத்துக்கு சயனைடு பார்சல் அனுப்பிய வழக்கு, சி.பி.சி.ஐ.டி பிரிவிலிருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்)மாற்றப்பட்டுள்ளது.
கோவையில் உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு மர்ம பார்சலில் சயனைடு தடவிய பழங்கள், மற்றும் பிஸ்கட்டுகள் அடங்கிய பார்சல் வந்தது. இந்தபோலீஸ் ஸ்டேஷனில் உள்ள அனைவரையும் தீர்த்துக் கட்ட நடந்த இந்த சதித் திட்டம் தொடர்பாக அக்பர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அக்பர் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணையில் இருந்தார். தற்போது இந்த வழக்கை குண்டு வெடிப்புச் சம்பவத்தை விசாரணை செய்து வந்த சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இக்குழு விசாரணைக்குப் பிறகே சயனைடுவுக்கு பின்னால் உள்ள சதித் திட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications