"போராட்டமா ...? அப்புறம் பார்க்கலாம்
ராமநாதபுரம்:
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் போராட்டம் குறித்து பிறகுமுடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மூப்பனார் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார் மூப்பனார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
கேள்வி: சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்திருக்கிறீர்களே எப்பொழுதுபோராட்டம்?
பதில்: சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதா? அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தலாமா?என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரண்டு நாட்களில் போராட்டம் பற்றிஅறிவிக்கப்படும்.
கேள்வி: ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக தமிழக கர்நாடக அரசுகளின்நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கிறதா?
பதில்: ராஜ்குமார் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். அது தான் இப்பொழுதுமுக்கியம். அரசுகள் என்ன செய்தாவது ராஜ்குமாரை
பத்திரமாக மீட்டாக வேண்டும் என்று வழக்கம் போலவே நிருபர்களின்கேள்விகளையே பதிலாக்கி ஜாலவார்த்தைகள் சேர்த்து பதில் சொன்னார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications