காஷ்மீரில் போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ஒரு போலீஸ் அதிகாரி 2 தீவிரவாதிகள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், 2 தீவிரவாதிகள்சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது போலீஸ் அதிகாரி ஒருவரும் தீவிரவாதிகளுக்குப் பலியானார்.
தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, நவ்காம் தோரு பகுதியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலைஅடையாளம் தெரியாத ஒருவரின் இறந்த உடல் மீட்கப்பட்டது.
பாம்பரா படமலூ பகுதியில், சனிக்கிழமை நடந்த மோதலின் இறுதியில் ஒரு தீவிரவாதி பிடிபட்டான். அவனிடமிருந்து 2 கிரனெட் கையெறி குண்டுகள்பறிமுதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications