போலீசே கரைத்த பிள்ளையார் சிலைகள்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

மிக உற்சாகமாக கொண்டாட வேண்டிய விழா எல்லாம், ஒவ்வொரு முறையும்பிரச்சனையாகிக் கொண்டிருக்கின்றன.

பிள்ளையார் சதுர்த்தி என்றாலே தமிழக காவல்துறை தலையைப் பிய்த்துக் கொள்ளும்.எந்த அரசு இருந்தாலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் என்பது வருடாவருடம்ரகளையில்தான் முடிகிறது.

இந்த முறை. திண்டுக்கல்லில் கலவரச் சூழல்! அங்கு சனிக்கிழமை விநாயகர் சதுர்த்திஊர்வலம் நடந்தது. பாரைப்பட்டியில் இருந்து எட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாககொண்டு செல்லப்பட்டன.

பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக செல்லக் கூடாது என்று போலீசார் தடைவிதித்திருந்தனர். வழக்கம் போல, விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசல் ஏரியாவுக்கு வர,போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்து முன்னணியினர் அப்படித்தான் செல்வோம் என்று பிடிவாதம் பிடித்தனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். மறுபடியும் இரண்டாவதுகட்டமாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதுவும் தோல்வியில் முடிய திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சத்யமூர்த்தி இந்துமுன்னணியினரை ஒதுங்கச் சொல்லி போலீசாரே, விநாயகர் சிலைகைள கரைக்கட்டும்என்று முடிவு சொன்னார். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக சிலைகளை போலீசார் இழுக்க அதை தடுத்தஇந்து முன்னணியினர் 19பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன்போலீசாரே எட்டு பிள்ளையார் சிலைகளையும் கோட்டைக் குளத்திற்கு எடுத்துச்சென்று கரைத்தனர்.

இன்னும் சில நாட்களில் சென்னை உட்பட பல நகரங்களில் விநாயகர் ஊர்வலங்கள்நடக்க இருக்கின்றன. இங்கேயும் அமைதியாக ஊர்வலம் நடந்து முடியுமா? அல்லதுபோலீசார் தான் விநாயகர் சிலைகைளை கரைக்கப் போகிறார்களா? என்பதைபயத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள் (விநாயகரும்தான்!).

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+