ஜன்னல் வழியாக நுழைந்து ரூ. 5 லட்சம் திருட்டு
கோவை:
வீட்டில் புகுந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கம்ப்யூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில்வீடு உள்ளது.
சம்பவத்தன்று, வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் காற்று வர மாடியில் உள்ள ஜன்னலைத்திறந்து வைத்திருந்தனர். அப்போது, ஜன்னல் வழியாக இரண்டு பேர் வீட்டிற்குள் இறங்கியுள்ளனர்.
பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு கீழே குதித்துத் தப்ப முயன்றுள்ளனர். அப்போது முருகேசன் விழித்துக்கொண்டுள்ளார். திருடர்கள் தப்ப முயல்வதைப் பார்த்த அவர் சத்தம் போட்டுள்ளார். அப்போது திருடரகள் தப்பி ஓடி விட்டனர்.
இது தொடர்பாக முருகேசன் போலீசுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications