For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர வெளளம்: அரிசி வழங்கி மேல்மருவத்தூர் பீடம் உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக 504 மூட்டை அரிசியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்வழங்கியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் பெய்து கனமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் பெருத்த வெள்ளசேதம் ஏற்பட்டது. தற்பொழுதுஅமெரிக்காவில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள பங்காரு அடிகளார் இது பற்றி தகவல் அறிந்து வெள்ள நிவாரண பணியை மேற்கொள்ள பீடத்துக்குஉத்தரவிட்டார்,

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அரிசி அனுப்பிவைக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆந்திர வெள்ள நிவாரண பணிக்கு ஞாயிற்றுக்கிழமை 504 அரிசி மூட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டன. அத்துடன் பொருட்களை நேரில் சென்றுசேர்ப்பிக்குமாறு அடிகளார் உத்திரவிட்டதனால், சுமாந்திரன், ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் 108 செவ்வாடை தொண்டர்களும் ஆந்திராசென்றனர்.

இந்த அரிசி செவ்வாய்க்கிழமைக்குள் ஆந்திரா சென்றடையும் என்று ஆதிபராசக்தி அறநிலையப் பொருளாளர் ஏ.கே.வெங்கடசாமி தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X