தூத்துக்குடி வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை
சென்னை:
கடன் தொல்லை காரணமாக தூத்துக்குடியைச் சேர்ந்த வியாபாரி குடும்பத்துடன்நாகப்பட்டனத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் வானூரமூட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி ராஜன்(வயது 45). ஆகஸ்ட் 31-ம் தேதி இவர் தனது மனைவி விஜயலட்சுமி (வயது 30),மகள்கள் சுதா (15), சசிகலா (8) ஆகியோருடன் தூத்துக்குடியிலிருந்து, நாகப்பட்டனம்நகருக்கு வந்துள்ளார்.
நாகை வந்த அவர் அங்கு பஸ் நிலையம் அருகே லாட்ஜில் ரூம் எடுத்தார். ரூமுக்குசென்ற அவர்கள் வெகு நேரம் வெளியே வரவில்லை. இதனால் லாட்ஜ்நிர்வாகிகளுக்கு சந்தேகம் வந்தது.
லாட்ஜ் ஊழியர்கள் சிலர் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கேராஜனின் குடும்பத்தினர் அனைவரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்துலாட்ஜ் நிர்வாகத்தினர் போலீசுக்குப் புகார் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணையில், ராஜன் கடன் நெருக்கடியில் இருந்ததாகவும், இதனால் மனம்உடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.