மின்சாரம் தாக்கி நான்கு பேர் பலி
சென்னை:
சென்னை அருகே மின்சாரம் தாக்கி நான்கு பேர் இறந்தனர்.
சென்னையை அடுத்துள்ள சூரப்பட்டு என்ற பகுதியில், ஒரு தனியார் கல்லூரி இருக்கிறது. கல்லூரியின் பின்புறத்தில் பெரிய காலி மைதானம் உள்ளது.
இந்தப்பகுதியில் மின் கம்பங்கள் நடப்பட்டு விளக்கு பொருத்தும் பணி நடந்து வந்தது. மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இதற்கானகாண்டிராக்டை எடுத்திருந்தார்.
அவர் கம்பெனியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன்கள் கணேசன், கண்ணன் ஆகிய இருவரும் அங்குள்ள மின் கம்பங்களில் விளக்குகளை பொருத்தும் பணியில்ஈடுபட்டனர்.
பெரிய டிராலி ஒன்றில் அமர்ந்தபடி அவர்கள் இந்த பணியைச் செய்தனர். டிராலியை தொப்புளான் , ராஜேந்திரன் ஆகிய கூலித் தொழிலாளர்கள் தள்ளிச்சென்றனர்.
செவ்வாய்கிழமை மதியம் 12 மணியளவில் அவர்கள் டிராலியை தள்ளிக் கொண்டு சென்ற பொழுது அது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின் கம்பியில்உரசியது.
அடுத்த விநாடி டிராலி முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. டிராலியில் இருந்த கணேசன், கண்ணன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டனர்.தொப்புளான், ராஜேந்திரன் மீதும் மின்சாரம் பாய்ந்தது அவர்கள் நான்குபேரும் பிணமானார்கள்.
பலியான நான்கு பேரும் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் அம்பத்தூரில் இருந்துபோலீஸாரும்,தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications