வீரப்பன் பிடிவாதம் .. சென்னை திரும்பினார் கோபால்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக மூன்றாவது முறையாக காட்டுக்குச் சென்றிருந்த நக்கீரன் ஆசிரியர்கோபால், சென்னை திரும்பிவிட்டார்.
ராஜ்குமாரைக் கடத்திய வீரப்பன் பல கோரிக்கைகளை விதித்துள்ளான். கர்நாடக நீதிமன்றத்தில் உள்ள 121 தடாகைதிகளை வழக்குகளில் இருந்தும், சிறையில் இருந்தும் விடுதலை செய்ய வேண்டும், தமிழக சிறையில் உள்ளஐந்து தமிழ் தீவிரவாதிகளை வழக்குகளில் இருந்தும், சிறையில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன்கோரிக்கை விதித்திருந்தான்.
இதுதொடர்பான அரசுத் தரப்பு பதிலுடன் ராஜ்குமாரை மீட்பதற்காக கடந்த 28-ம் தேதி காட்டிற்குச் சென்றிருந்தகோபால். இந்த நிலையில், புதன்கிழமை காலை சென்னை திரும்பினார்.
கோபால் வருகை குறித்து, காட்டுக்குள் தற்போது சுமூகமான சூழ்நிலை நிலவவில்லை என்று மட்டும் கூறப்பட்டது.செவ்வாய்க்கிழமை மதியம் வரை நக்கீரன் ஆசிரியர் கோபால் வீரப்பனிடம் பேசியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்தது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என் கோரிக்கைகள் நிறைவேறாதவரை, ராஜ்குமாரை விடுவிக்க முடியாது என்பதில் உறுதியாகவே இருக்கிறானாம்வீரப்பன். வீரப்பன் பேசிய ஆடியோ கேஸட்டுகள், வீடியோ கேஸட்கள் ஆகியவற்றையும் கோபால்கொண்டுவந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
நக்கீரன் கோபால், சென்னை வந்தது பற்றி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.