பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் .. வாஜ்பாய்
நியூயார்க்:
எல்லை தாண்டி தீவிரவாதத்தில், ஈடுபடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேணடும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தைத் துவக்கியுள்ள பிரதமர் வாஜ்பாய், வியாழக்கிழமை நியூயார்க் நகரம் சென்று சேர்ந்தார். அங்கு ஆசிய சங்கக்கூட்டத்தில் அவர் பேசுகையில், பாகிஸ்தான் தனது பயங்கரவாதச் செயல்களை நிறுத்த வேண்டும். இந்தியாவுக்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதைகைவிட வேண்டும்.
இந்தியா தனது அணு ஆயுத சுய கட்டுப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிக்கும். அணு ஆயுதங்கள் ஆபத்தானவை, அழிவுக்கு வழி வகுப்பவை. இதில்சந்தேகமில்லை. உலகம் முழுவதிலுமிருந்து முற்றிலும் அவை அழிக்கப்பட வேண்டும். அதுவரை சுய பாதுகாப்புக்காக இந்தியாவும் குறைந்தபட்ச அணுஆயுதங்களை வைத்திருக்கும்.
நாங்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று எங்களது பிராந்திய சூழ்நிலை அறிவுறுத்தியதால்தான் அணு ஆயுதங்களை இந்தியா நாடவேண்டியதாயிற்று.
உலகம் முழுவதிலும் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்று கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே இந்தியா குரல் கொடுத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில்,தேசிய பாதுகாப்புக்கு மிரட்டல் வரும் சூழ்நிலை ஏற்பட்டதால்தான் நாங்கள் அணு ஆயுதங்களைத் தேடிச் சென்றோம்.
இந்தியாவின் பாதுகாப்பு, வளர்ச்சி, நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே ஆசியாவின பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளர்ச்சி அமையும் என்று நாங்கள்கருதுகிறோம்.
சி.டி.பி.டி. குறித்து இந்தியா முழுவதும் தேசியக் கருத்து எட்டப்பட வேண்டும் என்று இந்தியா கருதுகிறது. இருப்பினும் எந்த நாடும் நிபந்தனையின்றி இந்தஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நாஷ்டாக்கில் ஜஸ்வந்த் சிங்:
இதற்கிடையே சர்வதேச பங்குச் சந்தையான நாஷ்டாக்கிற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் விஜயம் செய்தார். நாஷ்டாக்கின் செயல்பாடுகுறித்து அவர் கேட்டறிந்தார்.
நாஷ்டாக்கிற்குச் சென்ற முதல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் பேசுகையில், இதுவரைஇந்தியாவைச் சேர்ந்த இன்போசிஸ், சத்யம் உள்பட மூன்று நிறுவனங்கள் நாஷ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்தப் பட்டியல்அதிகரிக்கும் என்று நம்புகிறேன் என்றார் சிங்.