சென்னை பெண் டாக்டருக்கு பாரத் கெளரவ விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கீதா சுப்ரமணியத்துக்கு இந்திய சர்வதேச நண்பர்கள் சங்கம் சார்பில் பாரத் கவுரவ விருதும்,தங்கப்பதக்கமும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மனித சமுதாயத்துக்கும், மருத்துவத்துறைக்கும் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்த விருதும், தங்கப்பதக்கமும் டெல்லியில் நடந்த விழாவில்வழங்கப்பட்டன.
பாரத் கவுரவ விருது வழங்க நாடு முழுவதும் இருந்து 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழகத்திலிருந்து கீதா சுப்பிரமணியம் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், சென்னை மருத்துவக் கல்லூரியிலும் இருதய நோய் நிபுணராக, கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கீதா சுப்ரமணியம். இவரது கணவரும் மருத்துவரே.












Click it and Unblock the Notifications