அதிபர் தேர்தலில் போட்டியிடும் புஷ் -வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு
நியூயார்க்:
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் வாஜ்பாயுடன் அந் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் புஷ்தொலைபேசியில் பேசினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா வந்துள்ள 150 நாட்டுத் தலைவர்களில்வாஜ்பாயுடன் மட்டுமே புஷ் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கில் இருந்த வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட புஷ், இந்திய-அமெரிக்க உறவில்என்.ஆர்.ஐ. இந்தியர்களின் பங்களிப்பைப் பாராட்டினர். அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கையும்சுட்டிக் காட்டினார்.
அவருக்கு பதிலளித்த வாஜ்பாய், இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான நண்பர்கள் என்றார். மேலும்புஷ்சின் தேர்தல் அறிக்கையில் கூட இந்திய-அமெரிக்க நல்லுறவு குறித்து குறிப்பிட்டுள்ளதற்கும் நன்றிதெரிவித்தார்.
இந்திய-அமெரிக்க நல்லுறவு கிளின்டனின் முயற்சியால் தொடங்கியது. அவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்.புஷ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்தியாவுடனான அமெரிக்கஉறவில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதையே புஷ்சின் தொலைபேசிப் பேச்சு காட்டிகிறது என அரசியல்பார்வையாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications