தமிழகத்தில் பிறக்கும் ஊட்டசத்து குறைவான குழந்தைகள்
கோவை:
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஊட்டச் சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் பிறப்பது 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உள்ளது எனயுனிசெப் நிறுவனத் திட்ட அலுவலர் லதா தெரிவித்தார்.
கோவை அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் ஊட்டச் சத்துக் கருத்தரங்கு நடந்தது. இந்தக் கருத்தரங்கிற்கு பல்கலைக் கழக வேந்தர் ராஜம்மாள்தேவதாஸ் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டு யுனிசெப் நிறுவனத்தின் திட்ட அலுவலர் லதா பேசியதாவது:
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு போதுமான ஊட்டச் சத்துணவு கிடைப்பதில்லை. இதனால் 25 முதல் 30 சதவீத குழந்தைகள்ஊட்டச் சத்துப் பற்றாக்குறையால் எடை குறைவாகவே பிறக்கின்றன.
இதனைத் தடுக்க யுனிசெப் நிறுவனம் முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. எனவே, மீண்டும் தீவிர முயற்சியை யுனிசெப் நிறுவனம்மேற்கொள்ளவிருக்கிறது.
ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் தரித்தது முதல் குழந்தை வளர்வது வரை 24 மாதங்கள் மிகவும் முக்கியமான மாதங்களாகும். இந்த கால கட்டத்தில் தான்குழந்தையின் மூளை வளர்ச்சியும், மன வளர்ச்சியும் உண்டாகும். இதற்கென யுனிசெப் நிறுவனம் அதிக கவனம், நிதியுதவியும் அளிக்கவுள்ளது என்றார்லதா.