ஆசியத் தொழிலாளர்கள் கையில் வளைகுடா நாடுகள்

Subscribe to Oneindia Tamil

துபாய்:

வளைகுடா நாடுகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் ஆசியத் தொழிலாளர்களும், வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அதிக அளவுதேவைப்படுகிறார்கள் என்று அங்குள்ள நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு நாடுகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆசிய தொழிலாளர்கள் அமைச்சக நிபுணர் அபைதுல்லா மதானி பேசுகையில்,ஐக்கிய அரபு நாடுகளின் மக்கள்தொகை ஒரு மில்லியனுக்கும் குறைவாக உள்ளது. அவர்களில் முதியோர்கள் தவிர பெரும்பாலானோர் பெண்கள்மற்றும் குழந்தைகள்.

இவர்களை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டின் குறிக்கோளை அடைய முடியாது. அதாவது வெளிநாட்டு தொழிலாளர்களின் உதவியின்றி ஐக்கிய நாடுகள்முன்னேற்றமடைவது மிகவும் கடினம்.

சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைனிலிருந்து தொழிலாளர்கள் வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். இதனால் ஐக்கிய அரபு நாடுகளின் வளர்ச்சியும்,பொருளாதார முன்னேற்றமும் தடைபடுகிறது.

இங்கு வாழும் மக்கள் கடினமாக உழைத்தாலும், அடுத்த 20 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள், குறிப்பாக ஆசியர்கள் தேவைப்படுவார்கள்.

2010 ம் ஆண்டுக்குள் ஐக்கிய அரபு நாடுகளில் ஆசியா மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள்.

அதாவது, விவசாயத்தில் 8 லட்சத்து 44, ஆயிரம் தொழிலாளர்கள், போக்குவரத்துத் துறையில் 8 லட்சம் பேர், ரியல் எஸ்டேட் தொழிலில் 6 லட்சத்து 23ஆயிரம் பேர், சுரங்கத்தொழிலில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர், கட்டிடத் தொழிலில் 2.23 மில்லியன், வர்த்தகத்தில் 2.4 மில்லியன், அரசுத் துறையில் 7.3மில்லியன் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்று அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்றார் மதானி.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+