ராஜ்குமார் தந்தை நினைவு நாள்
பெங்களூர்:
சனிக்கிழமை நடிகர் ராஜ்குமாரின் தந்தையின் நினைவு நாளாகும்.
ராஜ்குமாரின் தந்தை பெயர் சிங்காநல்லூர் புட்டசுவாமைய்யா. அவருடைய மறைவு தினத்தன்று ராஜ்குமார் வீட்டில் சிறப்பு பிரார்தனைகள் நடப்பதுவழக்கம். ஆனால் இந்த வருடம் அவர் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ளார்.
வீட்டில் பூஜைகளை முடித்துக் கொண்ட பின்னர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார்ஆகியோர் மந்த்ராலயம் சென்றனர்.
முன்னதாக, சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு, பர்தம்மா பெங்களூர் வானொலி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த வேண்டுகோளில், சனிக்கிழமை எனது மாமனாரும், எனது கணவர் ராஜ்குமாரின் தந்தையுமான புட்டசாமய்யாவின் நினைவுநாளாகும். ராஜ்குமார்,அவரது தந்தை மேல் மிகுந்த பாசமும், மரியாதையையும் வைத்திருப்பவர். அவரை நீங்கள் கடத்தி சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.
அவரை சீக்கிரம் விடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்தார்












Click it and Unblock the Notifications