டெலிபோன் ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி:
தொலைபேசி ஊழியர்களின் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாபஸ் பெறப்பட்டது.
அவர்களின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்ததையடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
தொலைத் தொடர்புத் துறையை தனியார் நிறுவனமாக மாற்றுவதை எதிர்த்தும், பணிநிரந்தரம், பணிபாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தியும் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி ஊழியர்கள் கடந்த புதன்கிழமை வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
அவர்களது வேலைநிறுத்தத்தால் கடந்த மூன்று நாட்களாக நாடு முழுவதும் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தொழிற்சங்கத் தலைவர்களை மத்திய தகவல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வெள்ளிக்கிழமைஅழைத்துப் பேசினார்.
பேச்சுவார்த்தையின்போது ஓய்வு பெற்றபின் கிடைக்கும் சலுகைகள், பணிபாதுகாப்பு தொடர்பான முக்கிய கோரிக்கைகளை அமல்படுத்தும்படிதொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பாஸ்வான் அறிவித்ததையடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.