For Daily Alerts
Just In
கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை
கோவை:
திருப்பூரில் கடன் தொல்லையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டனர்.
தேனி மாவட்டம், அல்லி நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (40). இவர் தனது மனைவிசரோஜா (38) வுடன் திருப்பூரில் குடியிருந்து வந்தார்.
இருவரும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் குடும்பம் நடத்தபோதிய வருமானம் இல்லாததால் கடன் வாங்கினர். ஆனால் இந்தக் கடனைத் திருப்பிச்செலுத்த இயலவில்லை.
எனவே, கடன் கொடுத்தவர்கள் தொல்லை தாங்காமல் விஷம் குடித்தனர்.
இருவரும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். இந்த சம்பவம் குறித்துதிருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Story first published: Sunday, September 10, 2000, 5:30 [IST]