வீரர்களுக்குப் பணத்தைக் கையில் கொடுப்பது தவறு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தடகள வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசுப் பணம் கொடுப்பதை கைவிட வேண்டும் எனறு முன்னாள்ஓலிம்பிக் தடகள வீரர் குர்பச்சன் சிங் ரந்தவா கூறியுள்ளார்.

1964 ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில்,இறுதிச் சுற்று வரை வந்தவர் குர்பச்சன் சிங் ரந்தவா.

இந்திய அணியின் ஒலிம்பிக் வாய்ப்புகள் குறித்து ரந்தவா கூறுகையில், வீரர்களுக்குப் பரிசுப் பணத்தைக்கையில் கொடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக அவர்களது பெயரில் வங்கியில் முதலீடு செய்து விடவேண்டும். அப்படி இல்லாமல் கையில் பணத்தைக் கொடுப்பதால், போட்டிகளில் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கம், வீரர், வீராங்கனைகளிடம் குறைந்து விடுகிறது.

இந்திய தடகள வீராங்கனையான ஜோதிர்மாயி சிக்தர், 1999-ம் ஆண்டு நடந்த ஆசிய தடகளப்போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றார். இதன் மூலம் அவருக்கு 2 லட்சம் பரிசுப் பணம்கிடைத்தது. அதன் பிறகு வேறு போட்டிகளில் பங்கேற்க அவர் மறுத்து விட்டார். பணத்தைக் கையில்கொடுக்காமல் இருந்தால், எதிர்காலத்தில், இதுபோன்ற சூழ்நிலை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

இந்திய வீரர், வீராங்கனைகள் அவர்கள் பார்க்கும் வேலை குறித்து அக்கறை காட்டாமல்உள்ளனர். விளையாட்டின் மூலம் நிறைய பணம் கிடைப்பதால், அதுவே போதும் என அவர்கள் முடிவுசெய்து விடுகிறார்கள்.

பிற நாடுகளில் இப்படி நிலை கிடையாது. ரயில்வே, விமானப்படை, போலிஸ் என எந்தத் துறையில்இருந்தாலும் முதலில் அந்தத் துறையின் வேலைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிறகுதான்விளையாட்டு. ஆனால் இந்தியாவில் அப்படிப்பட்ட நிலை கிடையாது என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+