For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேச உறவில் விரிசல் இல்லை ... கூறுகிறது பாக்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

நியூயார்க்கில் நடந்த ஐ.நா.சபை மில்லினியம் வருடக் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்பும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும்சந்தித்துப் பேசாததால் இரு நாடுகளுக்குமிடையேயுள்ள உறவில் விரிசல் என்று நினைக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளது.

பாகிஸ்தான் உயர்அதிகாரி ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், 1971 ல் வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்தது குறித்து வங்கதேச பிரதமர் ஹசீனா,பாகிஸ்தானை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். இதனால் இப்போதைக்கு வங்கதேச பிரதமருடன் பேசுவதில்லை என்று ஆட்சியாளர் முஷாரப் முடிவுசெய்துள்ளார் என்றார்.

முன்னதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், 1971 ல் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப்பிரிப்பதற்காக போர் நடந்தது. அந்தச் சண்டையின்போது பலர் இறந்தனர். அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றுவலியுறுத்தினார்.

இதற்கிடையே, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முஷாரப் கூறுகையில், ஐ.நா.மில்லினியம் வருடக் கூட்டத்தில் இரு பிரதமர்களும் சந்தித்துப் பேசாததால் இருநாடுகளுக்கும் உறவு முறிந்து விட்டது என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அதில் சிறிதளவும் உண்மையில்லை என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X