கமாண்டோக்களைத் தயார்படுத்துகிறது தமிழக அரசு?
சென்னை:
இரு மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்கு வீரப்பன் ஒத்துவராவிட்டால் நடிகர் ராஜ்குமாரை அதிரடிப்படை மூலம் மீட்க தமிழக அரசு ரகசிய திட்டம்தீட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக 50 கமாண்டோக்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். புதிய திட்டத்தின்படி, புதிதாக ஒரு அதிரடிப்படையை அமைக்க தமிழ அரசுதிட்டமிட்டுள்ளது. இதில், சேர பல எஸ்.பி.க்கள், துணை கமிஷனர்கள் அரசிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக அரசுத் தூதர் கோபால் மூன்று முறை காட்டுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். தமிழ்த் தீவிரவாதிகளைவிடுவிப்பது மற்றும் கர்நாடகத்தில் பல்வேறு சிறைகளில் இருக்கும் தமிழ் தடா கைதிகளை விடுவிப்பது போன்ற இரு நிபந்தனைகளையும் அரசுநிறைவேற்றினால்தான் ராஜ்குமாரை விடுவிப்பேன் என்று வீரப்பன் உறுதியாகக் கூறி வருகிறான்.
ஆனால், வீரப்பனுடன் பேச்சுவார்த்தை மூலமே சுமூகத் தீர்வு காண முடியும் என்று இரு மாநில அரசுகளும் நம்புகின்றன. மத்திய அரசோ,ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் இரு மாநில அரசுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று கூறியுள்ளது.
வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்க எல்லாவிதத்திலும் உதவி செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசிடம்கையேந்துவதை இரு மாநில அரசுகளும் தன்மானப் பிரச்சனையாகக் கருதுகிறது.
இதனால், அதிரடி படை ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள கூட்டு அதிரடிப்படையைக் கலைத்துவிட்டு, புதிய அதிரடிப்படையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.
இந்த அதிரடிப்படை அதிநவீன ஆயுதங்கள் கொண்டதாக இருக்கும். இதற்கு எஸ்.பி.அந்தஸ்துள்ள போலீஸ் அதிகாரி தலைமை வகிப்பார். இதில் பங்கேற்கவிருப்பம் உள்ளவர்கள் தமிழக அரசை அணுகலாம் என்று தமிழ்நாடு முழுவதும் போலீஸாருக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை அடையாறு துணைக் கமிஷனர் சைலேந்திர பாபு, தற்போதைய அதிரடிப்படையிலுள்ள எஸ்.பி.பெரியய்யா, முன்பு அதிரடிப் படையில் இருந்துவீரப்பனுடன் நேருக்குநேர் சண்டையிட்டு இரண்டு கைவிரல்களை இழந்த தமிழ்செல்வன் ஆகியோர் புதிய அதிரடிப்படையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதுதவிர, மேலும் பல போலீஸ் அதிகாரிகள், புதிய அதிரடிப்படையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications