கமாண்டோக்களைத் தயார்படுத்துகிறது தமிழக அரசு?
சென்னை:
இரு மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்கு வீரப்பன் ஒத்துவராவிட்டால் நடிகர் ராஜ்குமாரை அதிரடிப்படை மூலம் மீட்க தமிழக அரசு ரகசிய திட்டம்தீட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக 50 கமாண்டோக்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். புதிய திட்டத்தின்படி, புதிதாக ஒரு அதிரடிப்படையை அமைக்க தமிழ அரசுதிட்டமிட்டுள்ளது. இதில், சேர பல எஸ்.பி.க்கள், துணை கமிஷனர்கள் அரசிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக அரசுத் தூதர் கோபால் மூன்று முறை காட்டுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். தமிழ்த் தீவிரவாதிகளைவிடுவிப்பது மற்றும் கர்நாடகத்தில் பல்வேறு சிறைகளில் இருக்கும் தமிழ் தடா கைதிகளை விடுவிப்பது போன்ற இரு நிபந்தனைகளையும் அரசுநிறைவேற்றினால்தான் ராஜ்குமாரை விடுவிப்பேன் என்று வீரப்பன் உறுதியாகக் கூறி வருகிறான்.
ஆனால், வீரப்பனுடன் பேச்சுவார்த்தை மூலமே சுமூகத் தீர்வு காண முடியும் என்று இரு மாநில அரசுகளும் நம்புகின்றன. மத்திய அரசோ,ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் இரு மாநில அரசுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று கூறியுள்ளது.
வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்க எல்லாவிதத்திலும் உதவி செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசிடம்கையேந்துவதை இரு மாநில அரசுகளும் தன்மானப் பிரச்சனையாகக் கருதுகிறது.
இதனால், அதிரடி படை ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள கூட்டு அதிரடிப்படையைக் கலைத்துவிட்டு, புதிய அதிரடிப்படையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.
இந்த அதிரடிப்படை அதிநவீன ஆயுதங்கள் கொண்டதாக இருக்கும். இதற்கு எஸ்.பி.அந்தஸ்துள்ள போலீஸ் அதிகாரி தலைமை வகிப்பார். இதில் பங்கேற்கவிருப்பம் உள்ளவர்கள் தமிழக அரசை அணுகலாம் என்று தமிழ்நாடு முழுவதும் போலீஸாருக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை அடையாறு துணைக் கமிஷனர் சைலேந்திர பாபு, தற்போதைய அதிரடிப்படையிலுள்ள எஸ்.பி.பெரியய்யா, முன்பு அதிரடிப் படையில் இருந்துவீரப்பனுடன் நேருக்குநேர் சண்டையிட்டு இரண்டு கைவிரல்களை இழந்த தமிழ்செல்வன் ஆகியோர் புதிய அதிரடிப்படையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதுதவிர, மேலும் பல போலீஸ் அதிகாரிகள், புதிய அதிரடிப்படையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications