For Quick Alerts
For Daily Alerts
Just In
சோனியா வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
டெல்லி :
சோனியா காந்தி வெளிநாட்டுப் பெண் என்பதால் அமேதி தொகுதியில் நடந்த எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றாது செல்லாது என்றுசுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி உத்தரபிரதேசத்தில் அமேதி மற்றும் கர்நாடகத்தில்பெல்லாரி தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றார்.
தேர்தலுக்குப் பின் பெல்லாரி தொகுதியை ராஜினாமா செய்தார். தேர்தல் நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்த பின் தற்போது ஹரி கிருஷ்ணன் லால்என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் சோனியா காந்தியின் தேர்வை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், சந்தோஷ் ஹெக்டே, பாலகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Monday, September 11, 2000, 5:30 [IST]