வீரப்பனால் தேர்தலில் பாதிப்பு ஏற்படாது .. வைகோ
திருச்சி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிரச்சினையால் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சியில், வைகோ ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மக்களிடம் செல்வாக்கை இழந்த கட்சிகள் ஒருவருக்கொருவர் மாற்றிமாற்றி விமர்சனம் செய்து கொள்வதும், பின்னர் கைகுலுக்கிக் கொள்வதும் வழக்கமாக நடந்து வரும் நிகழ்ச்சி.
ஜெயலலிதாவும், மூப்பனாரும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் அந்தக் கனவு ஒருபோதும்பலிக்காது.
தி.மு.க.கூட்டணியில் ம.தி.மு.க.நீடிக்கும். ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். தமிழகத்தில் சில இடங்களில் தி.மு.க., ம.தி.மு.க.தொண்டர்களிடையே மோதல்ஏற்பட்டுள்ளது. அதை முதல்வரிடம் தெரிவித்து சரிபடுத்திக் கொள்வேன்.
வீரப்பன் பிரச்சனை தேர்தலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. முதல்வர் கருணாநிதி எடுக்கும் முடிவுகளை அனைத்து மாநில முதல்வர்களும்பாராட்டுகிறார்கள்.
ஈரோடு எழுச்சி மாநாட்டிற்குப் பிறகு ம.தி.மு.க., நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு நவம்பர் 16 ம் தேதி சென்னையில் தேர்தல் நடைபெறும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications