Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்கும் பறவைகள் பண்ணை

Subscribe to Oneindia Tamil

பனாஜி:

கோவாவில் பறவைகள் பண்ணை ஒன்றை மூன்று வாலிபர்கள் அமைத்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துவருகின்றனர்.

குப்லியோ டிசெளசா (30), லோவன் பெரீரா (29), பிரமோத் மட்கைகர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கோவாவில்"பேக்வுட்ஸ் என்ற பறவைகள் பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து டிசெளசா கூறுகையில், கோவாவில் 450 விதமான பறவைகள் உள்ளன. இவ்வளவு பறவைகள் உள்ளகோவா, சர்வதேச அளவில் பறவைகள் பராமரிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பறவைகள் பண்ணை அமைப்பது குறித்து பல சுற்றுலா அமைப்புகளிடம் பேசினோம். இறுதியில் அவர்களதுஒத்துழைப்புடன் இந்தப் பறவைப் பண்ணையை அமைத்துள்ளோம்.

தற்போது பேக்வுட்ஸ் என்ற பறவைகள் பண்ணையை தலைநகர் பனாஜியில் அமைத்துள்ளோம். இங்கு கண்ணைக்கவரும் வகையில் எல்லா விதமான பறவைகளும் உள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குதேவையான பறவைகளை வாங்கிச் செல்கிறார்கள்.

இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்காண்டிநேவியா போன்ற பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம்வருகிறார்கள். அப்படி வரும் பயணிகள் அனைவரும் பறவைகள் பண்ணையை "விசிட் அடிக்காமல்இருப்பதில்லை.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சூரிய உதயத்தைக் கண்டு ரசிப்பதற்காக மட்டுமே வருவார்கள்என்று பிறர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. கோவாவின் இயற்கை எழிலை ரசிக்கவும், பறவைகள்பண்ணையைப் பார்க்கவும் பலர் வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டவர்கள் ஏராளமானோர்பறவைகளைப் பார்த்து ரசிக்க வருகின்றனர்.

பறவைப் பண்ணைக்கு வருவோரின் எண்ணிக்கை இப்போது 400 ஆக உள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்றுநம்புகிறோம் என்றார்

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+