கோபாலை மாற்றும் எண்ணம் இல்லை .. கர்நாடக அமைச்சர்
பெங்களூர்:
வீரப்பனைச் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசுத் தூதர் கோபாலை மாற்றும் எண்ணம் இல்லை என்று கர்நாடக காவல்துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
பெங்களூர் அம்பேத்கார் பவனில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில், தடா கைதிகள் வழக்கில் வீரப்பனின்கூட்டாளிகளுக்காக ஆஜராகி வாதாடும் வக்கீல் வேணுகோபால் அரசுத் தூதராக காட்டுக்கு அனுப்பப்படுவார் என்று கூறுவது வதந்தி. அதுகுறித்துவெளிவரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை.
வீரப்பனைச் சந்தித்துப் பேசுவதற்காக கோபால் மூன்று முறை காட்டுக்குச் சென்று திரும்பியுள்ளார். ஆனால் அது தோல்வி என்று நாம் கூறிவிடமுடியாது. 4 வது முறையும் கோபாலே காட்டுக்குச் செல்வார். அதில் எந்த மாற்றமும் இல்லை.
கோபாலைத்தான் அரசுத்தூதராக அனுப்ப வேண்டும் என்ற அரசின் முடிவுக்கு பொதுமக்களும், அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்றார் கார்கே.












Click it and Unblock the Notifications