செஸ் உலகக் கோப்பையை வென்றார் ஆனந்த்
Subscribe to Oneindia Tamil
ஷெங்கியாங் (சீனா):
முதல் செஸ் உலகக் கோப்பையை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வென்றுள்ளார்.
சீனாவில் உள்ள ஷெங்கியாங் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் 1.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷ்யாவின் எவ்கென்னிபரீவைத் தோற்கடித்தார்.
இதன் மூலம் உலக செஸ் அமைப்பான பிடே நடத்திய முதல் செஸ் உலகக் கோப்பையை ஆனந்த் வென்றார். ஆனந்த்துக்கு பரிசுத் தொகையாக ரூ.22.5 லட்சம்கிடைத்தது.
இந்த வெற்றியை அடுத்து உலக செஸ் வீரர்கள் தரப் பட்டியலில் இரண்டாவது இடத்தை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பு ஆனந்துக்குக் கிடைத்துள்ளது. முதல்இடத்தில் ரஷ்யாவின் காரி காஸ்பரோவ் உள்ளார்.
வரும் நவம்பர் 25-ம் தேதி டெல்லியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்க உள்ளது. அப் போட்டியில் கலந்து கொள்ள தற்போதைய வெற்றிஆனந்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications