ஆந்திராவில் 72 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
சென்னை:
சென்னை காசிமேடு மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றன. ஆந்திரக்கடல் பகுதியில் மீன் வளம் அதிகம் உள்ளதால், சென்னை விசைப்படகு மீனவர்கள் அங்கு செல்கின்றனர்.
தங்கள் பகுதியில் புகுந்து சென்னை மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு ஆந்திர மீனவர்கள் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதைபொருட்படுத்தாமல் சென்னை மீனவர்கள் ஆந்திரப் பகுதிக்குள் நுழைந்து மீன்களை அள்ளிக் கொண்டு வந்து விடுகின்றனர்.
சில நேரங்களில் இப்படி வரும் சென்னை மீன்வர்களை ஆந்திர மீனவர்கள் படகுகளில் வழி மறித்து பிடித்து விடுகின்றனர். பின்னர் அவர்களிடம் அபராதத்தொகையை வசூலித்து விட்டு அனுப்பி விடுகின்றனர்.
இந்த தைரியத்தில் சென்னை மீனவர்களின் ஊடுருவல் நீடித்து வந்தது. கடந்த 10ம் தேதி காசிமேடு துறைகத்தில் இருந்து 9 படகுகளில் 72 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராமதீர்த்தம் என்ற கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு கட்டுமரங்களில் வேகமாக வந்த ஆந்திர மீனவர்கள், சென்னை மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர்.
சென்னை மீனவர்களை அடித்து உதைத்தனர். பின்னர் விசைப்படகுகளுடன் அவர்களை சிறைப்பிடித்தனர்.
தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட தகவல் சென்னை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்கத்திற்கு கிடைத்ததும், இங்கிருந்து மீனவர் பிரதிநிதிகள் குழுஆந்திராவுக்கு சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications