வாஜ்பாய் உரைக்கு முன் இந்து மத வழிபாடு
வாஷிங்டன்:
அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில், பிரதமர் வாஜ்பாய் உரையாற்றுவதற்கு முன் இந்து பூசாரி ஒருவர் வழிபாடு நடத்துவார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வாஜ்பாய் 13 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா.மில்லினியம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். புதன்கிழமைஅவர் தலைநகர் வாஷிங்டன் பயணமாகிறார். ர் 14-ம் தேதி அவர் நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில் பேசுகிறார்.
வாஜ்பாய் உரையாற்றத் தொடங்கும் முன் இந்து மத பூசாரி ஒருவர் வழிபாடு நடத்தி நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்துமத பூசாரி ஒருவர் பக்தி உரை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும் சர்வதேச உறவுக் கமிட்டித் தலைவருமான பிரவுன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அவர்தான்,அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உரையாற்றுவதற்கும், அதற்கு முன் பூசாரி ஒருவர் வழிபாடு நடத்துவதற்கும் சபாநாயகர் டென்னிஸ்ஹாஸ்டெர்ட்டுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்றிருந்தார்.
காங்கிரஸ் பூஜைக்காக ஒஹிமா பார்மாவில் உள்ள சிவவிஷ்ணு கோவிலிலுள்ள பூசாரி வெங்கடாச்சலபதி சமுல்தரலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார். வாஜ்பாய்பேசத் துவங்குவதற்கு முன்பு, 9 மணிக்கு சமுல்தரலா நாடாளுமன்றத்துக்கு வருவார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதுவரை முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆகியோர் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்து சாமியார் பக்தி உரைநடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
அதற்கு முன்பாக, பிரதமர் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக வாஷிங்டன் வரும் பிரதமர் வாஜ்பாய்க்கு, ஆன்ட்ரூஸ் விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படும். அங்கிருந்து வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் கிளின்டன் உள்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்த்தித்துப் பேசுவார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications