காஷ்மீர் சுயாட்சி குறித்து விரைவில் பேச்சு .. உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி வழங்குவது பற்றி மீண்டும் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று மத்திய வர்த்த மற்றும் தொழில் துறை இணைஅமைச்சர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியா திரும்பியவுடன் காஷ்மீர் சுயாட்சி பற்றி மீண்டும் பேச்சுநடத்தப்படும். இந்த மாதத்திலேயே இப் பேச்சு வார்த்தை நடத்தப்படலாம்.
காஷ்மீர் சுயாட்சி கோரிக்கை கைவிடப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறு. காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது பற்றி நடவடிக்கைகள் தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து காஷ்மீர் மாநில அரசுடன் பேச்சு நடத்த ஒரு கமிட்டியை மத்திய அரசு நியமித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இக் கமிட்டி, ஜம்மு காஷ்மீர்மாநில அரசு நியமித்துள்ள கமிட்டியுடன் பேசி முடிவு எடுக்கும்.
காஷ்மீர் சுயாட்சி குறித்து தேவைப்பட்டால் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப் பேரவையில் மீண்டும் விவாதிக்கப்படும் என்றார் ஒமர் அப்துல்லா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications