மில்லேனியம் கோப்பை கால்பந்து: 16 நாடுகள் பங்கேற்பு
கல்கத்தா:
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மில்லேனியம் கோப்பை கால்பந்துப்போட்டியில் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனம் சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதிமுதல் 25-ம் தேதி வரை இக் கால்பந்துப் போட்டி நடைபெற உள்ளது.
கல்கத்தா, கோவா, கொச்சி ஆகிய நகரங்களில் கால்பந்து ஆட்டங்கள் நடைபெறும்.இப் போட்டியில் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. அனைத்து நாடுகளும் தங்களதுபங்கேற்பை உறுதி செய்துள்ளன.
1998-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கலந்து கொண்டகேமரூன், கொலம்பியா,ஜப்பான், சிலி, ஜமைக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகியநாடுகளுடன் பஹ்ரைன், ஹாங்காங், இந்தோனேஷியா, ஈராக், நியுசிலாந்து, கடார்,டிரினிடாட் அன்ட் டொபாக்கோ, உருகுவே, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துகொள்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியாவும் இப் போட்டியில் கலந்துகொள்கிறது.
16 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். லீக் மற்றும் நாக்-அவுட் முறையில்ஆட்டங்கள் நடத்தப்படும். லீக் போட்டிகளுக்குப் பிறகு கால் இறுதி ஆட்டங்கள்நடத்தப்படும்.
கொச்சியில் இரு ஆட்டங்களும், கல்கத்தா மற்றும் கோவாவில் தலா ஒரு ஆட்டமும்நடத்தப்படும். கல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் இரு அரையிறுதிஆட்டங்களும், ஜனவரி 25-ம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறும்.