11 ஜாதிகள் சேர்ந்து ஒரு கட்சி ... நாளை உதயம்
சென்னை:
அனைத்து முதலியார் சங்கத்தின் தலைமையில் பத்து சாதிச் சங்கங்களைக் கொண்டபுதிய கட்சி வெள்ளிக்கிழமையன்று தொடங்கப்படுகிறது என முதலியார் பேரவையின்தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியின்பெயர், கட்சியின் கொடி, கட்சி நிர்வாகிகள் குறித்து வெளளிக்கிழமையன்றுநடைபெறும் கட்சிக் கூட்டத்தின் போது முடிவு செய்யப்படும். அது குறித்த விவரம்மாலை அறிவிக்கப்படும்.
மூன்றாவது அணி அமைக்கப்பட்டால் எஙகள் கட்சி அதில் அங்கம் வகிக்கும். ஆனால்தி.மு.க., அ.தி.மு.க.விடமிருந்து விலகி நின்றே செயல்படும்.
தமிழகத்தில் உள்ள 110 தொகுதிகளில் முதலியார் சமூகத்தினரின் வாக்கே வெற்றிவாயப்பை நிர்ணயிக்கும். நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் கூட 50 தொகுதிகளில்நிச்சயமாக வெற்றி பெறுவோம். அக்டோபர் 1-ம் தேதி கட்சியின் மாநிலக் கூட்டம்நடைபெறும் அதைத் தொடர்ந்து பேரணியும் நடைபெறும்.
முதலியார்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதே கட்சியின் முக்கியக்குறிக்கோள் என அவர் கூறினார்.
கட்சித் தலைவர் சண்முகம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என். ஐ.