ரூ. 1.5 கோடி லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
சென்னை:
தமிழகம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த ஒண்ணரை கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம்மற்றும் அதை கடத்திய வாகனங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
தமிழகத்தின் வழியாக கேரள மாநிலத்திற்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து காவல்துறை கூடுதல் இயக்குனர் அலெக்ஸாண்டர் உத்தரவின் பேரில்மதுவிலக்குப் பிரிவு போலீஸார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கடந்த பத்து தினங்களாக தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தருமபுரி அருகே குடுப்பட்டி ரோடு சந்திப்பில் லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனையிட்டதில்அந்த லாரியில் இருந்த 1,000 லிட்டர் எரிசாராயம் பிடிபட்டது. மேலும் நீலகிரி மாவட்டம் கார்குடி- தோராபள்ளி ரோட்டில் பிடிபட்ட லாரியில் 1350 லிட்டர் எரி சாராயம், கோவை மாவட்டம்அவினாசி - பெருந்துறை ரோட்டில் பிடிபட்ட லாரி மற்றும் கார்களில் இருந்து ஏழாயிரம் லிட்டர்சாராயமும் பிடிபட்டது.
இந்த தீவிர வேட்டையில் மொத்தம் சுமார் 65,510 லிட்டர் எரி சாராயம் பிடிபட்டது. இரண்டுகார்கள், பத்து லாரிகள் ஆகியவையும் கைபற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ஒரு கோடியேஐம்பது லட்சம் ஆகும்.