For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ.உளவாளிகளுக்குத் தகவல் கொடுத்த ராணுவ அதிகாரி கைது

By Staff
Google Oneindia Tamil News

லக்னோ:

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.உளவாளிகளுக்குத் தகவல்கள் கொடுத்தது தொடர்பாக ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் ராணுவ அதிகாரிபுதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவர் பெயர் ராம்தேவ் யாதவ். உத்தரப்பிரதேசத்தில், ராணுவ இளநிலை அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். நேபாளத்தில் உள்ள பாகிஸ்தான்ஐ.எஸ்.ஐ.உளவாளிகளுக்குத் இந்திய ராணுவ ரகசியங்களைக் கொடுத்தது தொடர்பாக கூட்டு அதிரடிப் படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் இதேபோல் ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்திய ராணுவ மேஜர் தாஜ் முகமது ஷேக் மற்றும் 4 இளநிலை அதிகாரிகள் கூட்டு அதிரடிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த கைது குறித்து லக்னோ போலீஸ் எஸ்.பி.அருண்குமார் கூறுகையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராம்தேவ் யாதவ் உள்பட ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட 5 பேரும் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு ரகசியத் தகவல்கள் கொடுத்துள்ளனர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X