வள்ளுவர் சிலையைத் திறந்தால் நடப்பதே வேறு .. எச்சரிக்கிறார் வாட்டாள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

எங்களை மீறி பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தால் நடப்பதே வேறுஎன்று கன்னடத் தீவிரவாதப் போக்குக் கொண்ட இயக்கமான கன்னட சளுவளிஅமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூர்மல்லேஸ்வரத்தில் பேரணி நடந்தது. ராஜ்குமார் கடத்தலைக் கண்டித்தும், அவரைவிடுவிக்கக் கோரியும் நடத்தப்படுவதாக கூறப்பட்ட இந்த பேரணி தமிழர்களுக்குஎச்சரிக்கை விடுக்கும் விதத்திலேயே இருந்தது.

இந்தப் பேரணிக்கு போலீஸார் அனுமதி தரவில்லை. இருப்பினும் தடையை மீறிகருப்புக் கொடியுடன் இந்த அமைப்பினர் பேரணி நடத்த முயன்றனர். அவர்களைபோலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். மாலையில் அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.

பேரணியைத் துவக்கி வைத்து வாட்டாள் நாகராஜ் பேசுகையில், ராஜ்குமார் முதலில்வரட்டும். அவர் பத்திரமாக வரும் வரை நாங்கள் பொறுத்திருப்போம். இது வெறும்அடையாள பேரணிதான்.

நக்கீரன் கோபால் பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். காட்டுக்குள்போவதாகவும், வீரப்பனிடம் பேசுவதாகவும் அவர் கூறுகிறார். ஆனால் காட்டுக்குள்போகாமலேயே பொய்யான ஆடியோ கேசட்டைக் கொண்டு வருகிறார்.

கோபாலால் வீரப்பனைச் சந்திக்க முடிகிறபோது, ஏன் தமிழக போலீஸாரால் அவனைக்கைது செய்ய முடியவில்லை. அனைவரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள்.

பெங்களூரில் எந்தச் சூழ்நிலையிலும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிக்கமாட்டோம். எங்களை மீறித் திறந்தால் நடப்பதே வேறு என்று அவர் பேசினார்.

1991-ம் ஆண்டு நடந்த காவிரிக் கலவரத்தின்போது தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் வாட்டாள் நாகராஜின்கன்னட சளுவளி அமைப்பு இருந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+