உதயமானது புதிய நீதிக் கட்சி
சென்னை:
அனைத்து முதலியார் முன்னேற்றப் பேரவை உட்பட பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய புதிய கட்சி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
புதிய நீதிக் கட்சி என பெயரிடப்பட்டுள்ள அக் கட்சியின் கொடி, கொள்கைகளை அக் கட்சித் தலைவர் சண்முகம், சென்னை காமராஜர் அரங்கில்அறிவித்தார்.
அனைத்து முதலியார்கள் சங்கம், வேளாளர்கள் முன்னேற்றப் பேரவை, அகில இந்திய துளுவ வேளாளர் சங்கம், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம்,தொண்டை மண்டல சைவ முதலியார்கள் சங்கம், சோழிய வேளாளர்கள் சங்கம், சேனைத் தலைவர்கள் மகாசபை, கார்காத்த வேளாளர்கள் சங்கம், இசைவேளாளர்கள் சங்கம், சேக்கிழார் பேரவை, ஆதிசைவ வேளாளர் சங்கம்,பிள்ளைமார் கூட்டமைப்பு, தேவர் பேரவை, அகமுடையார் பேரவை, தேவரினமக்கள் கூட்டமைப்பு ஆகியவை இந்த கட்சியில் இணைந்துள்ள அமைப்புகளாகும்.
அனைத்து சமுதாயத்தினருக்கும் சமநீதி கிடைக்கப் பாடுபடுதல்,முற்பட்ட சமுதாயத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காக பாடுபடுதல், அண்ணாவின் இரு மொழி கொள்கையை தொடர்ந்து கடைபிடித்தல்,தமிழகத்துக்கு பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். அளித்த சமுதாய மேம்பாட்டுக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுதல் உள்ளிட்ட 25கொள்கையை இக் கட்சி அறிவித்துள்ளது.