கும்பகோணம் அருகே 130 வயது பாட்டி மரணம்
கும்பகோணம்:
40 பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வந்த 130 வயது மூதாட்டி இறந்தார். சாகும்வரை இவரது கண்பார்வையில் எந்தக் கோளாறும் ஏற்படவில்லை.
கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி மேலத்தெருவில் வசித்து வந்தவர் நடேசபடையாச்சி. இவர் கடந்த கடந்த 40ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவரது மனைவி லெட்சுமி அம்மாள். வயது 130. இவர்களுக்கு 5 மகள்கள். இரண்டு மகன்கள். அதில் தற்போது ஒரு மகன் மட்டும் உள்ளார்.
மற்றவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள். லெட்சுமி அம்மாளுக்கு 40 பேரன் பேத்திகள் உள்ளனர். வண்டுவாஞ்சேரியில் தனது பேத்தி ராஜாத்திவீட்டில் வசித்து வந்த இவர் கடந்த 13 ம் தேதி இறந்து விட்டார்.
கடந்த தேர்தலின்போது இவர் தன்னந்தனியாக வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டார். அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டால்இவர் தானே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.