ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
சென்னை:
சென்னை மணலி அருகே ஏரியில் குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
மணலி பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் ராஜாமுத்தையா. இவருடைய மகன் விஜயகாந்த். 12. மணலி சந்தனக்கிருஷ்ண தெருவை சேர்ந்த சிறுவர்கள் நவீன் குமார், அழகு ராஜா.
இந்த மூன்று பேரும் மணலி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார்கள்.
சனிக்கிழமை இந்தப்பள்ளியில் பரிட்சை நடந்தது. பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய 3 மாணவர்கள் டியூஷன்செல்கிறோம் என்று கூறி விட்டு தங்கள் நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து மணலி அருகேயுள்ள ஏரிக்குச் சென்றனர்.
அப்போது விஜயகாந்தும், அழகர் ராஜாவும் ஏரியில் உள்ள நீரில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்காகநவீன்ராஜா ஏரிக்குள் குதித்தான். ஆனால் மூன்று பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
இதைப்பார்த்த பிற சிறுவர்கள் அங்கிருந்து நேராக வீட்டுக்குச் சென்று விவரங்களைக் கூறினார்கள். பின்னர்போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குப்பின் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று இறந்தமூன்று சிறுவர்களின் பிணங்களை மீட்டனர்.