கட்சியின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லையென்றால் நவம்பரில் புதுக் கட்சி - பாஸ்வான்
ஜெய்ப்பூர்:
ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லையென்றால்கட்சியிலிருந்து விலகி நவம்பர் 23-ம் தேதி புதுக் கட்சி தொடங்குவேன் என்று அக்கட்சியின் முக்கிய தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான்கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இப்போதைக்குப் புதுக் கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், நான்இப்போதுள்ள ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.
இனிமேல் கட்சியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் நான் புதுக்கட்சி தொடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும். நவம்பர் 23-ம் தேதி அந்த புதுக்கட்சியைத் தொடங்குவேன். கட்சிக்கு இன்னும் பெயர் தேர்வு செய்யப்படவில்லை.
ஐக்கிய ஜனதா தளம் தேசியக் கட்சியாக இருந்தாலும் பல மாநிலங்களில் அக் கட்சிசெயல்படுவதாகத் தெரியவில்லை. இது வருந்தத்தக்கது. இதுவரை ஐக்கிய ஜனதா தளக்கட்சியின் நிர்வாகத் தேர்தல் நடைபெறவில்லை. ஜனநாயக அமைப்பில் ஒரு அரசியல்கட்சி தனது நிர்வாகத் தேர்தலை நடத்தியாகவேண்டும்.
ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தேர்தல் நடைபெறவில்லை. பாரதீய ஜனதாகட்சி போன்றவை உள்கட்சித் தேர்தலை நடத்தியிருக்கும்போது ஐக்கிய ஜனதா தளக்கட்சியிலும் உள் கட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றார் பாஸ்வான்.
யு.என்.ஐ.