பாட்மின்டன்: அடுத்த சுற்றில் இந்திய வீரர் கோபிசந்த்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பாட்மின்டன் போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் கோபி சந்த் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குமுன்னேறினார்.
இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இரண்டாவது வெற்றி இது. ஏற்கெனவே இந்திய ஹாக்கி அணி தனதுமுதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு முதல் வெற்றியையும் தேடித்தந்தது.
மற்ற விளையாட்டுக்களில் கலந்து கொண்ட இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தோல்வியைத்தழுவிய நிலையில் கோபி சந்த் தனது முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றது சற்று ஆறுதல்அளிக்கும் விஷயமாகும்.
திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அவர் உக்ரைன் நாட்டின் விளாடிஸ்லாவ் டுருஸ்சென்கோவைஎதிர்த்து விளையாடினார். இதில் அவர் 15-3, 10-15, 15-7 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications