பா.ம.க. தொண்டர்கள் வன்முறை-பஸ் எரிப்பு
பெரம்பலூர்:
கட்சி நிறுவனர் ராமதாஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம்முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் திங்கள்கிழமை வன்முறையில்ஈடுபட்டனர்.
புதுவை அருகே ஞாயிற்றுக்கிழமை காரில் சென்று கொண்டிருந்த ராமதாஸ் மீது சிலர்கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாகராமதாஸ் தப்பினார்.
ராமதாஸ் மீது நடத்தப்பட்ட இத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும்பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை புறநகர் பகுதியான பெருங்குடியில் திங்கள்கிழமை அதிகாலை அரசு பஸ்ஸைவன்முறையாளர் தீ வைத்துக் கொளுத்தினர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.
பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கச் சொல்லிவிட்டு அவர்கள்பஸ்ஸுக்குத் தீவைத்தனர். இதனால், பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை.
தமிழகத்தின் பல இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் வாகனங்கள் மீதுஅவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக பெரம்பலூர் மற்றும் கடலூர்மாவட்டங்களில் அவர் அதிக வன்முறையில் ஈடுபட்டனர்.
சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதால் இரு மாவட்டங்களிலும் உள்ள பலஇடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம்,மீன்சுருட்டி பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சாலை மறியலால் சென்னை-கும்பகோணம் சாலையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்துஅரியலூர் மற்றும் பெரம்பலூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டது.
பாமகவினரின் கல் வீச்சில் 7 பஸ்கள், 6 லாரிகள், ஒரு டிராக்டர் உள்பட மேலும் பலவாகனங்கள் சேதமடைந்தனர். பல வாகனங்களின் டயர்களில் இருந்து அவர்கள்காற்றைப் பிடுங்கிவிட்டதால் அவை நடுவழியிலேயே நின்றன. இதனாலும்போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஆண்டிமடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் 4 பஸ்களைச்சிறைப்பிடித்து வைத்துள்ளது.
வன்முறைச் சம்பவங்களை அடுத்து பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில்போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு மாவட்டங்கள் முழுவதும்போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அருணாசலம் மீன்சுருட்டியில்முகாமுட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார். தற்போதுநிலைமை கட்டுக்குள் இருப்பாத அவர் தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே கைதுசெய்யப்படுவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கருணாநிதி கண்டனம்:
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மீது நடத்தப்பட்டதாக்குதலுக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. மயிரிழையில் அவர்உயிர்தப்பியது மகிழ்ச்சியளிக்கிறது.
வன்முறை என்ற பெயரில் அரசியல் நடவடிக்கைகளை கட்சிகள் மேற்கொள்வதுஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றுஅறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
Anbumani: இந்த 108 நாட்களில்! சவுமியா உடலில் ஆவி புகுந்துவிட்டது! அன்புமணி கலகல!












Click it and Unblock the Notifications