அரசியல்வாதிகள் மீது சி.எஸ். குற்றச்சாட்டு
சென்னை:
தென்னகத்தில் உள்ள நதிகளை இணைப்பதற்கான திட்டம் செயல்படாமல் நின்றுபோயிருப்பதற்கு அரசியல் கட்சிகளே காரணம் என மகாராஷ்டிர மாநில முன்னாள்கவர்னர் சி. சுப்ரமணியம் கூறியுள்ளார்.
மக்கள் சக்தி இயக்கம் சார்பில், சென்னிையில் ஞாயிற்றுக்கிழமையன்று தென்னக நதிகளைஇணைப்பது குறித்த மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் சி. சுப்ரமணியம் பேசியதாவது:
தென்னகத்தில் உள்ள நதிகளை இணைப்பது பற்றி சி.பி. ராமசாமி காவத்திலேயேபேசப்பட்டது. 1969-ம் ஆண்டு மும்பையில் நடந்த மாநாட்டில் தென்னக நதிகள்இணைப்பது குறித்து பேசப்பட்டது. ஆனால் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இப்போது இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இதை குறுகிய நோக்கோடுபார்க்காமல், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இது நிறைவேற்றப்பட வேண்டும்.
தென்னக நதிகள் இணைப்பு நிறைவேறாததற்கு காரணம் அரசியல்வாதிகளே. நாட்டில்அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஓரிடத்தில் வறுமையும், ஓரிடத்தில்வளமுமாக இரு வேறான நிலைகள் நிலவுகின்றன.
நாட்டின் நல்ல வளர்ச்சிக்கு நீர் மிகவும் அவசியமானது. இப்போது நிலங்களில்கல்விக்கூடங்களும், தொழிற்சாலைகளும் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் தண்ணீரின்தேவை அதிகரித்துள்ளது என்றார் அவர்.