For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நரபலிச்சாமியாரின் செக்ஸ் ஆட்டங்கள்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ரபலி சாமியார், நளினிசேகரனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். திங்கள்கிழமை ஆசிரமம்,மலையடிவாரத்தில் சில இடங்களிலும் தோண்டிப்பார்க்க இருக்கிறார்கள் போலீஸார்.

ஆசிரமத்தில் பல இடங்களில் சோதனை நடத்தியதில், செக்ஸ் வீடியோ கேஸட்கள், செக்ஸ் புத்தகங்கள் ஹோமோ செக்ஸ் பற்றியபடங்கள், வீடியோ கேஸட்களும் இருந்ததை போலீஸார் கைபற்றியிருக்கிறார்கள். சீட்டுக்கட்டுகளும் அங்கே கிடந்தன.ஆசிரமத்தில், பல இடங்களில் மது பாட்டில்களும் கிடந்தன.

சாமியார் மீது கடும் கோபத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார் சற்று முரட்டுத்தனமாக விசாரணையை ஆரம்பித்தனர். எடுத்தஎடுப்பிலேயே அடி, உதையுடன் விசாரணை ஆரம்பானது.

நடுங்கிப்போன நளினசேகரன் தயவு செய்து என்னை அடித்து துன்புறுத்தாதீர்கள். உங்களுடைய விசாரணைக்கு முழுவதுமாகநான் ஒத்துழைப்புத் தருகிறேன் என்றானாம்.

இவன் சைக்கோவா என்றரீதியிலும் விசாரணை நடக்கிறது.

விசாரணையில் நளினிசேகரன் அளித்த வாக்குமூலங்கள் போலீஸாரையே அதிர்ச்சிக்குள்ளாகுவதாக இருக்கிறது என்கிறார்கள்மதுரையில் இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் அதிகாரிகள்.

ஒரு அதிகாரி சொன்னார், ஆரம்பத்துல மிகவும் கஷ்டப்பட்டானாம். சோத்துக்கு வழியில்லாம அலைஞ்சானாம். பெரியபணக்காரனாகனும்னு நினைச்சானாம். மூதேவி, உழைக்க வழிதேடியிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது தொழில்செய்திருக்கலாம். இப்படி சாமி, நரபலின்னு எல்லாத்தையும் அசிங்கப்படுத்தியிருக்கவேண்டாம். விடக்கூடாது அவனை என்றுநிதானமாக பேச ஆரம்பித்த அந்த அதிகாரி உணர்ச்சிபூர்வமாக பேசுகிறார்.

பெண்களிடம் எனக்கு அதிக ஆசையிருந்தது. எனவே பெளர்ணமிதோறும் பெண்களுக்காக ஸ்பெஷல் பூஜைகள் நடத்தினேன்.பலருடன் மகிழ்ச்சியாகவும் இருந்தேன். ஆசிரமத்திற்கு வரும் பெண்களை, எனது செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்வதற்காகபல முக்கிய பிரகர்களுக்கும் விருந்தாக்கியுள்ளேன் என்றும் போலீஸாரிடம் விசாரணையில் கூறியுள்ளானாம் நரபலிசாமியார்நளினசேகரன்.

போலீஸ் விசாரணையில் இன்னொரு விஷயம் தெரியவந்துள்ளது. நளின சேகரன் ஹோமோ செக்ஸில் நாட்டள்ளவன்.மதுரையில் உள்ள இவரது அந்தரங்க வீட்டிலும் வீடியோ கேஸட்கள் நிறைய கைபற்றியுள்ளனராம் போலீஸார். தன்னுடன்செக்ஸூக்கு ஒத்துழைக்கும் வாலிபர்களுக்கு, அன்று இரவே ஒரு பெண்ணை பரிசாக ( செக்ஸூக்கு) அளிப்பாராம் நளினசேகரன்.

மிரண்டு போயிருக்கிறது மதுரை. திங்கள்கிழமை மதியம் முதல் ஆசிரமம் உட்பட பல இடங்களிலும் தோண்டுதல் படலம்ஆரம்பமாக இருக்கிறது. எங்கிருந்து எந்த பூதம் கிளம்புமோ என்று பயத்தில் நடுநடுங்கிக்கொண்டிருக்கிறது மதுரை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X