ரூ.12 கோடியில் ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணி
திருச்சி:
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு இறுதியில் கும்பாபிஷேம்நடைபெற உள்ளது. அதையொட்டி 12 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் முமுவீச்சில்நடைபெற்று வருகின்றன.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இங்குபெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கிறார். இங்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்தராஜ கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது இந்தத் திருத்தலத்தின் சிறப்புக்கு மேலும் சிறப்புசேர்ப்பதாகும்.
ராஜகோபுரத்திற்கான கும்பாபிஷேகம் 1987-ம் ஆண்டு நடந்தது. தற்போது ஸ்ரீரங்கம்கோவிலில் உள்ள 24 கோபுரங்களும், 53 உப சன்னிதிகளுக்கும் 4 கோடி ரூபாய் செலவில்திருப்பணிகள் செய்யப்படடு வருகின்றன. 8 கிலோமீட்டர் செலவில் உள்ள மதில் சுவர்கள்8 கோடியே 87 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமிகளின் தங்க விமானம் இறுதியாக பாலாலயம் செய்யப்பட்டுபணிகள் நிறைவு செய்யப்படும்.
1980-ம் ஆண்டுக்குப் பின்பு இப்போதுதான் முழுமையான கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது.












Click it and Unblock the Notifications