ரூ. 1,100 கோடியில் எச்.எம்.டி தொழிற்சாலை மறுசீரமைப்பு
கோவை:
எச்.எம்.டி நிறுவன மறு சீரமைப்பிற்காக ஆயிரத்து 100 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் தவணையாக ரூ.250 கோடி ரூபாய்வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் மனோகர் ஜோஷி தெரிவித்தார்.
கனரக மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் மத்திய இணை அமைச்சர் மனோகர் ஜோஷி, புதன்கிழமை கஞ்சிக் கோட்டில் நடக்கும் உலகளாவியகருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.
இதற்காக செப்டம்பர் 19ம் தேதி கோவை வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் குறித்த வெள்ளை அறிக்கை அக்டோபர் மாதம் மத்திய அரசிடம் அளிக்கப்படும்.
தற்போது 7 பெரும் தொழிற்சாலைகள் நிதி நெருக்கடியில் உள்ளன. 30 தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. 7 தொழிற்சாலைகளை மூடதொழிற்சாலைகளின் மறு சீரமைப்பு மற்றும் நிதி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
லாபத்தில் இயங்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு குறித்த பரிசீலனை செய்யப்படும். நஷ்டத்தில் இயங்கும்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து பரிசீலனை செய்வது கடினமே
மூ டப்படும் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தானாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு சுயதொழில் தொடங்க பயிற்சியும் வழங்கப்படும்.
ஊட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. இந்த தொழிற்சாலையை தொடர்ந்து நடத்தவும்மறு சீரமைப்பிற்கு உதவவும் ரூ. 150 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டுத் தொகையை கடனாக வழங்குவதா அல்லது மானியமாக அளிப்பதா என்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. பின்னர் இதுமத்திய அமைச்சரவையின் அனுமதிக்காக வைக்கப்படும்.
ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் நிறுவன (எச்.எம்.டி) மறு சீரமைப்பிற்கு அரசு ஆயிரத்து 100 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. ஏற்கனவே ரூ. 250 கோடிவழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தத் தொழிற்சாலை லாபகரமானதாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் மனோகர் ஜோஷி.












Click it and Unblock the Notifications