ஹாக்கி: தென் கொரியாவுடன் இந்தியா நாளை மோதல் - வென்றால் அரையிறுதி
சிட்னி:
ஹாக்கிப் போட்டியில் ஆண்களுக்கான பி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும் தென்கொரியாவும் வியாழக்கிழமை மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதியில் விளையாடும் தகுதியைஇந்தியா பெறும். ஏற்கெனவே இரண்டு ஆட்டங்கள் மூலம் இந்தியாவுக்கு 4 புள்ளிகள்கிடைத்துள்ளன.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில்தோற்கடித்தது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 2-2என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.
1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில்தான் இந்திய ஹாக்கி அணி கடைசியாகதங்கப் பதக்கம் வென்றது. அதற்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக அரையிறுதிஅளவுக்குக் கூட இந்திய ஹாக்கி அணி முன்னேறவில்லை.
தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணிஅரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். தென் கொரியா தனது முந்தைய இருஆட்டங்களிலும் டிரா செய்து 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்தியாவுடனான ஆட்டத்தில் தென் கொரியா தோற்றால் அரையிறுதிக்கு நுழையும்வாய்ப்பு பறிபோகும். ஆகவே, இந்தியாவை எப்படியாவது வெல்லவேண்டும் என்றுஅந்த அணி கடுமையாகப் போராடும்.
அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு நுழைய கிடைத்துள்ளவாய்ப்பைப் பயன்படுத்தி தென் கொரியாவைத் தோற்கடிக்கவேண்டும் என்று இந்தியஅணியினர் விளையாடுவார்கள்.
இந்தியாவும் தென் கொரியாவும் கடைசியாக பாங்காக் ஆசியப் போட்டியில் இறுதிஆட்டத்தில் மோதின. இதில் டை பிரேக்கர் மூலம் இந்தியா வெற்றி பெற்றுதங்கப்பதக்கம் வென்றது. அந்த வெற்றியை அடுத்தே சிட்னி ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இந்தியா தகுதி பெற்றது.
தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நிலைமைக்குத் தக்கபடி இந்திய வீரர்கள்விளையாடி வெற்றி பெற முயலுவார்கள். ஏற்கெனவே நடந்த இரு ஆட்டங்களில்தன்ராஜ் பிள்ளை, முகேஷ் குமார் இருவரும் சிறப்பாக விளையாடினர். தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் அவர்கள் சிறப்பாக விளையாடி அணிக்குவெற்றி தேடித் தருவார்கள் என்றார் அணிப் பயிற்சியாளர் பாஸ்கரன்.
ஐ.ஏ.என்.எஸ்.