"பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தாற்காலிகமானதுதான்"
டெல்லி:
பெட்ரோலியப் பொருட்களின் சமீபத்திய விலை உயர்வு தாற்காலிகமானதுதான்.விலை உயர்வு விரைவில் கட்டுப்படும் என்று பொருளாதார நிபுணர் சுனந்தா சென்கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஆண்டுஅறிக்கையை அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுப் பேசிகையில் கூறியதாவது:
உலகம் முழுவதும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதுதாற்காலிகமானதுதான். பெட்ரோலியப் பொருளான கேஸோலின் மீது ஐரோப்பியயூனியன் கடுமையான வரி உயர்வை விதித்துள்ளது. இதுதான் தற்போதைய விலைஉயர்வுக்குக் காரணம்.
கேஸோலின் மீதான வரியை ஐரோப்பிய யூனியன் முறைப்படுத்தினால் பெட்ரோலியப்பொருட்களின் விலை கட்டுப்படும். அது தவிர, பெட்ரோலிய உற்பத்தி மற்றும்ஏற்றுமதி நாடுகள் அமைப்பு பெட்ரோலிய உற்பத்தியை நாளொன்றுக்கு 8 லட்சம்பேரல் அளவுக்கு உயர்த்த முடிவு செய்துள்ளன.
இந்த முடிவு விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. அப்படி பெட்ரோலிய உற்பத்திஅதிகரித்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றும் அக்டோபர் 1-ம்தேதியிலிருந்து கட்டுப்படும் என்றார் அவர்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் இந்தியாவில் பணவீக்கம்அதிகரித்துள்ளது. அது தவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புவெகுவாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications