காஷ்மீர் குண்டுவெடிப்பில் 5 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் சங்கல்தான் பகுதியில் சனிகிழமை நடந்தவெடிகுண்டு சம்பவத்தில் 5 பேர் இறந்தனர்.
தத்தா பானி என்ற இடத்தில உள்ள ஒரு கடையில் இந்த வெடிகுண்டுவைக்கப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதே கடையில்வைக்கப்பட்டிருந்த மேலும் மூன்று குண்டுகளைப் போலீஸார் கண்டுபிடித்து செயலழிக்கச்செய்தனர்.
போலீஸாரைக் குறிவைத்து இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.குண்டுகளை வைத்ததற்கு எந்த தீவிரவாத அமைப்பு காரணம் என்று தெரியவில்லை.
இதற்கிடையே, ஸ்ரீநகருக்கு வடக்கே, குப்வாரா பகுதியில், ராணுவ வீரர்கள் நடத்தியதாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications