பஸ்களை எரிப்பவர்கள் பீடைகள் ..கருணாநிதி சாடல்
சென்னை:
பஸ் எரிப்பு, கல்வீச்சு போன்ற வன்முறையை தங்கள் கலாச்சாரமாக கொள்பவர்கள் இந்த சமுதாயத்தைப் பிடித்த பீடைகள் என்று அழகிரியையும், அவரதுஆதரவாளர்களையும் முதல்வர் கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கட்சிப் பத்திரிகையில், முதல்வர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
மதுரையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தால்; இன்னும் அதிகமாக மீறுவோம் என்று ஆர்ப்பரித்துஒருசிலர் தங்களின் வீரத்தைப் பஸ்கள் மீது காட்டி வருகின்றனர்.
ஆளும் கட்சியினராயிற்றே என்று பாராமல் சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இன்று வன்முறை அவர்களுக்கு உற்சாகமாகஇருக்கலாம். உடனிருந்து உசுப்பி விடுபவர்களுக்கும் குதூகலமாகத் தெரியலாம்.
வன்முறையில் ஈடுபடும் விலங்கு மன்றத்தினர் எதிர்க்கட்சியில் இருந்தாலும், தோழமைக் கட்சியில் இருந்தாலும், ஆளுங்கட்சியிலே இருந்தாலும்சட்டத்தின் மூலம் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்கள்.
இதில் எந்தவிதமான ஆசாபாசங்களுக்கும் இடமில்லை. அரசியலில், கல் எறிவதையும் வன்முறை சேட்டைகளையும் தங்களின் கலாச்சாரமாகக்கொள்பவர் யாராயினும் அவர்கள் இந்த சமுதாயத்தைப் பிடித்த பீடைகள், கொடியவர்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
அரசாங்க பஸ்கள் மீது வீசப்பட்ட ஒவ்வொரு கல்லும், பற்ற வைக்கப்பட்ட ஒவ்வொரு தீக்குச்சியும் பயணிகளின் கோபத்திற்கு உள்ளாகியவைமட்டுமல்ல; பாதிக்கப்பட்டவர்களின் சாபத்திற்கும் உள்ளாகியவையாகும். இன்னும் சொல்லப்போனால் என் இதயத்தை கிழிக்க எறியப்பட்டகற்கள், தீப்பந்தங்கள்.
1969ல் அண்ணா மறைவுக்கு பிறகு நான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும்; அந்தப் பொறுப்புக்கு நான்தான் வரவேண்டுமென்று வாதிட்டு வென்றதந்தை பெரியார் என்னிடம் கூறிய அறிவுரை என்ன தெரியுமா?
""அண்ணா சொல்லிவிட்டுப் போன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டில் முதலிரண்டையும் விட மூன்றாவதாகச் சொன்ன கட்டுப்பாடு தான் கட்சிக்குமுக்கியம் என்பதை மறந்து விடாதே.
பெரியார் சொன்ன இந்த அறிவுரையை மதித்து நடப்பதும், மறவாமல் இருப்பதும்தான் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லது என்பதைதிமுகவினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications