செய் நன்றி மறவாத மகேஸ்வரி
சென்னை:
தருமபுரியில் அதிமுகவினரால் எரிக்கப்பட்ட பஸ்சில் கருகி இறந்த மாணவி ஹேமலதாவின் சகோதரி உமா மகேஸ்வரி, தனது முதல் மாத சம்பளத்தைமுதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர்போராட்டம் நடத்தினர்.
உச்சகட்டமாக, தருமபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள் வந்த பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் ஹேமலதா உள்பட மூன்று மாணவிகள் எரிந்துபலியாயினர்.
மூன்று பேருடைய குடும்பத்தினுக்கும் அரசு வேலை வழங்கியது. ஹேமலதாவின் சகோதரி உமா மகேஸ்வரிக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவழங்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு முன்பு பணியில் சேர்ந்த உமா மகேஸ்வரி தனது முதல் மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். வெள்ளிக்கிழமை முதல்வர்கருணாநிதியைச் சந்தித்த அவர் தனது ஊதியமான ரூ. 12,040 பணத்தை முதல்வரிடம் கொடுத்தார். தனக்கு வேலை வழங்கியமைக்காக நன்றியையும்தெரிவித்துக் கொண்டார்.
முதல் மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய உமா மகேஸ்வரியை முதல்வர் கருணாநிதி பாராட்டினார்.












Click it and Unblock the Notifications